Begin typing your search above and press return to search.
நாமக்கல்லிற்கு பாஸ்போர்ட் சேவை மையம் தேவை: எம்.பி. ராஜேஷ்குமார் கோரிக்கை
நாமக்கல்லில் பாஸ்போட் சேவை மையத்துடன் கூடிய, புதிய தலைமை தபால் அலுவலகம் கட்டித்தர வேண்டும் என ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் வேண்டுகோள்.
HIGHLIGHTS
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமர் எம்.பி, டெல்லியில் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்னவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியுள்ளதாவது:
நாமக்கல்லில் தலைமை தபால் நிலைய கட்டுவதற்காக, தபால்துறை இயக்குனரகம் ரூ.82 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் 6,305 சதுரடி நிலம் தலைமை தபால் அலுவலகம் கட்ட ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.3.29 கோடி ஆகும். தலைமை தபால் அலுவலக கட்டிடத்துடன் இணைந்து பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்பட வேண்டும். இதற்கான கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். இதன்மூலம் பொதுமக்கள் பாஸ்போர்ட் பெறுவதற்காக வெளியூர்களுக்கு செல்லும் சிரமம் குறைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.