நாமக்கல் நகராட்சி 25வது வார்டு வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு
நாமக்கல் நகராட்சி 25வது வார்டு வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு
HIGHLIGHTS
நாமக்கல் நகராட்சியில் 25வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஒரு பெண் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் போட்டியிட அதிமுக, திமுக, காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், விஜய் மக்கள் இயக்கம் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட 25 வது வார்டில் போட்டியிட ஸ்ரீதேவி என்பவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். சந்தைப்பேட்டைப்புதூர் பகுதியைச் சேர்ந்த, இவர், திமுக பிரமுகர் மறைந்த டியூசன் மணி என்பவரின் மனைவிஆவார். இன்று வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், 25வது வார்டுக்கு ஸ்ரீதேவி மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளார். வேறு யாரும் இந்த வார்டுக்கு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் வருகிற 7ம் தேதி திங்கள்கிழமை வேட்பு மனு பரிசீலனை முடிவில் ஸ்ரீதேவி 25வது வார்டு கவுன்சிலராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.