Begin typing your search above and press return to search.
நாமக்கல் நகராட்சி: பாஜக வேட்பாளர் அகிலனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு
நாமக்கல் நகராட்சி 30வது வார்டில் பாஜக சார்பில் போட்டியடும் வேட்பாளர் அகிலனுக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
HIGHLIGHTS
நாமக்கல் நகராட்சி, 30வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, மாவட்ட பாஜக செயலாளர் அகிலன் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் நாமக்கல் திருச்சி ரோடு பகுதியில் உள்ள சத்யா நகர், செட்டியார் தெரு, ஜெயநகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பல இடங்களில் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். நகராட்சியில் நேர்மையான நிர்வாகம் அமைந்திடவும், 30வது வார்டில் அடிப்படை தேவைகள் நிறைவேற்றவும் தனக்கு வாக்களிக்குமாறு அகிலன் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் சத்யபானு, பாஜக பிரமுகர்கள் கண்ணன், சாரதா, பாஸ்கர், கந்தசாமி, நவீன், அங்கம்மாள், சுதா, பரமேஸ்வரி உள்ளிட்டோர் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.