நாமக்கல் நகராட்சி: பாஜக வேட்பாளர் அகிலன் வாக்குறுதி கூறி வாக்கு சேகரிப்பு
நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட 30வது வார்டில் பாஜக வேட்பாளர் அகிலன், பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் நகராட்சி, 30வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, மாவட்ட பாஜக செயலாளர் அகிலன் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் நாமக்கல் திருச்சி ரோடு பகுதியில் உள்ள சத்யா நகர், செட்டியார் தெரு, ஜெயநகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது, நான் வெற்றி பெற்றால், அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன், அனைவருக்கும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களையும், சலுகைகளையும் பெற்றுத் தருவேன். சாக்கடை தேங்காமல் சுகாதாரம் பேனப்படும். தெருநாய்களின் தொல்லைகளை குறைக்க நடவடிக்கை எடுப்பேன் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் சத்யபானு, பாஜக பிரமுகர்கள் கண்ணன், சாரதா, பாஸ்கர், கந்தசாமி, நவீன், அங்கம்மாள், சுதா, பரமேஸ்வரி உள்ளிட்டோர் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.