நாமக்கல் நகராட்சியில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி, கருத்தடை ஆபரேசன்
நாமக்கல் நகராட்சி சார்பில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் கருத்தடை ஆபரேசன் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் நகராட்சிப் பகுதியில் உள்ள 39 வார்டுகளிலும் தெருநாய்கள் அதிக அளவில் உலாவி வருகின்றன. சில இடங்களில் தெருவில் உள்ள வெறிநாய்கள் பொதுமக்களை கடிப்பதால், அவர்களுக்கு நோய் தாக்கி டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், நாய்களுக்கு ரேபிஸ் எனும் வெறிநோயின் தாக்குதலைக் கட்டுப்படுத்தவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையொட்டி, சுகாதார அலுவலர் சுகவனம் உத்தரவின்பேரில், தூய்மைப் பணியாளர்கள் ஒவ்வொரு தெருவிலும் உள்ள 25க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்து அதற்கான வாகனத்தில் கொண்டு வருகின்றனர்.
அவற்றை உழவர் சந்தை அருகில் உள்ள நாய்களுக்கான கருத்தடை மையத்திற்கு கொண்டு அங்கு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போட்டு, கருத்தடை ஆபரேசனும் செய்யப்பட்டது.
பின்னர் தெருநாய்கள் மீண்டும் அந்தந்த பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டன. இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.