/* */

நாமக்கல் நகராட்சியில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி, கருத்தடை ஆபரேசன்

நாமக்கல் நகராட்சி சார்பில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் கருத்தடை ஆபரேசன் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சியில் தெருநாய்களுக்கு  வெறிநோய் தடுப்பூசி, கருத்தடை ஆபரேசன்
X

பைல் படம்

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் உள்ள 39 வார்டுகளிலும் தெருநாய்கள் அதிக அளவில் உலாவி வருகின்றன. சில இடங்களில் தெருவில் உள்ள வெறிநாய்கள் பொதுமக்களை கடிப்பதால், அவர்களுக்கு நோய் தாக்கி டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், நாய்களுக்கு ரேபிஸ் எனும் வெறிநோயின் தாக்குதலைக் கட்டுப்படுத்தவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதையொட்டி, சுகாதார அலுவலர் சுகவனம் உத்தரவின்பேரில், தூய்மைப் பணியாளர்கள் ஒவ்வொரு தெருவிலும் உள்ள 25க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்து அதற்கான வாகனத்தில் கொண்டு வருகின்றனர்.

அவற்றை உழவர் சந்தை அருகில் உள்ள நாய்களுக்கான கருத்தடை மையத்திற்கு கொண்டு அங்கு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போட்டு, கருத்தடை ஆபரேசனும் செய்யப்பட்டது.

பின்னர் தெருநாய்கள் மீண்டும் அந்தந்த பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டன. இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 29 Aug 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  4. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  5. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  6. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  10. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!