Begin typing your search above and press return to search.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் மூடல்
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூடவேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
HIGHLIGHTS
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூடவேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாளை ஆக.15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை சட்டப்படி, அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்களை மூடிவைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மதுக்கடைகள் நாளை மூடப்படுகிறது. மேலும் ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பார்கள், லைசென்ஸ் பெற்றுள்ள ஓட்டல் பார்கள் அனைத்தும் மூடப்படவேண்டும். அரசு உத்தரவை மீறி மதுக்கடைகளை திறந்தாலோ, அல்லது மது விற்பனையில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.