நாமக்கல்லில் நாளை கொரோனா கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தினவிழா: கலெக்டர் கொடியேற்றுகிறார்
நாமக்கல்லில் நாளை கொரோனா கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தின விழா நடைபெறுகிறது. கலெக்டர் ஸ்ரேயாசிங் தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார்.
HIGHLIGHTS
நாமக்கல்லில் நாளை கொரோனா கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தின விழா நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார்.
நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாளை 15ம் தேதி காலை 9.10 மணிக்கு, மாவட்டவிளையாட்டு அரங்கில் சுதந்திர தின விழா நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். நிகழ்ச்சியில், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு அவர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்குகிறார். மாவட்ட போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் விழாவில் கலந்துகொள்கின்றனர்.
கொரோனா தொற்று பரவல் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் வழக்கமாக சுதந்திர தின விழாவில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சுதந்திரப் போராட்ட தியாகிகளை கவுரவித்தல் மற்றும் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைபிடித்து விழா நடைபெறும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.