/* */

நலிவடைந்த இசைக் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள்: அமைச்சர் வழங்கல்

நாமக்கல்லில் நலிவடைந்த இசைக்கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்புகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

HIGHLIGHTS

நலிவடைந்த இசைக் கலைஞர்களுக்கு கொரோனா  நிவாரணப் பொருட்கள்: அமைச்சர் வழங்கல்
X

நாமக்கல்லில் நலிவடைந்த இசைக்கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் வழங்கினார். அருகில் மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார்.

நாமக்கல்லில் நலிவடைந்த இசைக்கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்புகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட திமுக கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் பிரபு ஏற்பாட்டின் பேரில், மறைந்த கிளாரினெட் இசைக்கலைஞர் வேணுகோபாலின் 79வது பிறந்த நாளை முன்னிட்டு நலிவடைந்த இசைக்கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 35 நலிவடைந்த இசைக்கலைஞர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் மளிகைப்பொருட்கள் மற்றும் முட்டை உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கினார். முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் இளங்கோ, மாநில நிர்வாகிகள் நக்கீரன், மணிமாறன், டாக்டர் மாயவன், புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளர்கள் கவுதம், துரைராமசாமி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 13 Jun 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது