/* */

சூரத்தை தொடர்ந்து இந்தூரிலும் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு?

சூரத்தை தொடர்ந்து இந்தூரிலும் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலை உள்ளது.

HIGHLIGHTS

சூரத்தை தொடர்ந்து இந்தூரிலும் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு?
X

பாஜக வில் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் பாம்.

காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இந்தூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் பாம், கடைசி நேரத்தில் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுவிட்டு பாஜகவில் ஐக்கியமானார். இதனால் பாஜ வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் நிலை உள்ளது.

நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. வரும் வாரங்களில் இன்னும் 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கிடையே மத்தியப் பிரதேசத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் திடீரென தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுவிட்டு பாஜகவில் இணைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் பற்றி விவரம் வருமாறு:-

இந்தூரில் காங்கிரஸ் சார்பில் அக்ஷய் பாம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். அங்கே வரும் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அக்ஷய் பாம் திடீரென பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அங்கு இன்றுடன் வேட்புமனுவை வாபஸ் பெற கால அவகாசம் முடிகிறது. இந்த கால அவகாசம் முடிய சில மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில், அவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதன் மூலம் இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியே இல்லாமல் பாஜக வேட்பாளர் எளிதாக எம்பியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தூர் தொகுதியில் இப்போது பாஜகவில் இருந்து ஷங்கர் லால்வானி எம்பியாக இருக்கிறார். அவருக்கு எதிராகத் தான் அக்ஷய் பாம் என்பவரைக் காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்திருந்தது.. இருப்பினும், அவர் கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்று பாஜகவில் ஐக்கியமாகி இருக்கிறார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைவலியைக் கொடுத்துள்ள

உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் இதனால் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இப்படியொரு நபருக்கு சீட் கொடுத்தது காங்கிரஸ் தலைமையின் தவறு என்றும் அவர்கள் கொந்தளிக்கிறார்கள். இது தொடர்பாகக் காங்கிரஸின் தேவேந்திர சிங் கூறுகையில், "நான் கட்சித் தலைமைக்கு ஏற்கனவே அக்‌ஷய் பாம் பற்றி எச்சரித்திருந்தேன். அவர் வேட்புமனுவை வாபஸ் பெறுவார் என்று கூறியிருந்தேன். ஆனால் அவர்கள் தான் கேட்கவில்லை.. இப்போது நான் சொன்னது தான் நடந்துள்ளது. எங்களைப் போன்ற கட்சிக்காகப் பல ஆண்டுகள் உழைத்தவர்களுக்கு சீட் வழங்காமல் அக்ஷய் போன்ற நபர்களுக்கு சீட் வழங்குவது ஏன் என புரியவில்லை" என்று சாடினார்.

குஜராத் மாநிலம் சூரத் லோக்சபாவில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு ஏற்கனவே நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்ற நிலையில், பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளரை முன்மொழிந்து போடப்பட்ட கையெழுத்து போலி எனக் கூறி வேட்புமனுவை நிராகரித்திருந்தனர். இதே காரணத்தைக் கூறி அங்கு வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸின் மாற்று வேட்பாளரான சுரேஷ் பத்சலாவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக அங்கு பாஜக வேட்பாளர் போட்டியின்றி வென்றதாக அறிவிக்கப்பட்டது. மத்திய மற்றும் வட மாநிலங்கள் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பவை. அங்கு காங்கிரஸ், பாஜக நேரடியாக மோதும் தொகுதிகளில் யார் வெல்கிறார்கள் என்பது தேர்தலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே பாஜக எந்த எல்லைக்கும் போக ரெடியாகிறது என்று எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Updated On: 29 April 2024 10:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது