மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி நாமக்கல் பாஜ வேட்பாளர் பரப்புரை!
மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி நாமக்கல் பாஜ வேட்பாளர் பரப்புரை மேற்கொண்டார்.
HIGHLIGHTS
மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி, நாமக்கல் பாஜக வேட்பாளர் ராமலிங்கம் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
நாமக்கல் லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளராக, பாஜக மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பியுமான டாக்டர் ராமலிங்கம் போட்டியிடுகிறார். அவர், நாமக்கல் அருகே உள்ள கூலிப்பட்டி, ரெட்டிபட்டி, பொம்ம சமுத்திரம், புதுப்பட்டி, வசந்தபுரம், எருமப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு சென்று, திறந்த ஜீப்பில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு செய்துள்ள பல்வேறு திட்டங்களை எடுத்துக்கூறி தாமரை சின்னத்திற்கு ஓட்டு கேட்டார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி நேரடியாக, உஜ்வாலா திட்டத்தின் மூலம், நாட்டு மக்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கியுள்ளார். விவசாயிகளுக்கு கிசான் கவுரவ் திட்டம் மூலம் ஆண்டிற்கு ரூ. 6000 வழங்கி வருகிறார். இத்திட்டத்தில் தமிழகத்தில் 48 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களில் பொதுமக்களுக்காக இலவசமாக கழிப்பறைகளை கட்டி கொடுத்துள்ளார் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் மூலம் லட்சக்கனாக்கான பொதுமக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டம் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின்சாரத்தையும், மின் கட்டணத்தையும் சேமிக்க சோலார் மின் திட்டத்தை கொடுத்துள்ளார். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டேட் பயனடைந்துள்ளனர்.
மேலும் நமது மோடி அரசு தான் 496 ஆண்டுகால போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, 140 கோடி இந்துக்களின் இதய தெய்வமான ஸ்ரீ ராமருக்கு அயோத்தியில் பிரம்மாண்டமான ஆலயம் அமைத்து கும்பாபிஷேகம் நடத்தி வரலாற்று சாதனை படைத்துள்து. மேலும் நமது பாரத நாடு முன்னேற தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். நாமக்கல் மண்ணில் தாமரையை மலரச் செய்யுங்கள் என்று கூறினார். ஐஜேகே மாநில இளைஞரணி துணை செயலார் முத்துராஜா, திரளான பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் பிரச்சாரத்தில் கலந்துகொண்டனர்.