மோகனூர் புனித செபஸ்தியார் ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
மோகனூர் புனித செபஸ்தியார் ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
HIGHLIGHTS
மோகனூர் புதுத்தெருவில், ஆர்.சி பேட்டப்பாளையம் கிளைப்பங்குக்கு உட்பட்ட புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும், தேர்த்திருவிழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலை, 6 மணிக்கு, பங்கு தந்தை ஜான் போஸ்கோபால் தலைமையில் திருக்கொடி ஏற்றப்பட்டது. 23ம் தேதி, மாலை 6 மணிக்கு, நவநாள் ஜெபம் திருப்பலி நடைபெறும். 24ம் தேதி காலை, 10 மணிக்கு, சேந்தமங்கலம் பங்குதந்தை ஜான்சன் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெறும். பகல் 1 மணிக்கு, அன்பின் விருந்தும், மாலை 5 மணிக்கு பொங்கல் மந்திரிப்பு நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் பவனி நடைபெறும்.
மின் அலங்காரத் தேரில் எழுந்தரும் புனிதர், முக்கிய வீதிகள் வழியாக வந்து, பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். வழிநெடுகிலும், ஏராளமான கிறித்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, புனிதரை வணங்குவார்கள்.