சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
சர்வதேச மாற்றுத்தினாளிகள் தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் கலெக்டர் ஸ்ரேயாசிங் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வாளகத்தில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 8 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரி மூலம் இயங்கும் மடக்குச் சக்கர நாற்காலிகள், 9 பேருக்கு ரூ.47,583 மதிப்பில் மோட்டார் பொருத்திய தையல் மெசின்கள், 7 பேருக்கு ரூ.54,250 மதிப்பில் மடக்குச் சக்கர நாற்காலிகள், 5 பேருக்கு இலவச பஸ் பாஸ்கள், 8 பேருக்கு ரூ.26,800 மதிப்பில் அதிரும் மடக்குக் கோல்கள், ஒருவருக்கு ரூ.21,333 ஆயிரம் வங்கிக்கடன் மானியம், 2 பேருக்கு ரூ. 34 ஆயிரம் மதிப்பீட்டில் நலவாரிய சமூகப் பாதுகாப்புத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மொத்தம் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10,83,966 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 10 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் டிஆர்ஓ கதிரேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமுருகதட்சணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.