/* */

கரும்பு நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க விவசாயிகள் கோரிக்கை

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பிய கரும்பு நிலுவைத்தொகையை 15 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

கரும்பு நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க விவசாயிகள் கோரிக்கை
X

பைல் படம்.

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை விவசாயிகளுக்கு, வரவேண்டிய நிலுவைத்தொகையை 15 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து, மோகனூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் மணிவண்ணன், பொதுச்செயலாளர் மணிவேல் ஆகியோர், தமிழக சர்க்கரைத்துறை கமிஷனருக்கு அனுப்பியுள்ள மனுவில், நாமக்கல் மாவட்டம், மோகனூரில் உள்ள, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2021-2022ம் ஆண்டிற்கான, கரும்பு அரவைப் பருவம் 25.11.2021ல் தொடங்கி 20.03-2022ல் முடிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜனவரி 1 முதல் இது வரை 85 நாட்களுக்கு மேலாக, ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு கரும்புக்கான தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. விவசாயிகள்ஆலைக்கு சப்ளளை செய்துள்ள மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரம் டன் கரும்புக்கு சுமர் ரூ.35 கோடி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

கரும்பு பதிவு ஒப்பத்தப்படி, கரும்பு விவசாயிகள் ஆலைக்கு கரும்பு வழங்கிய 14 தினங்களுக்குள் கரும்புக்கான கிரயத் தொகை ஆலை மூலம் வழங்கப்படவேண்டும். வழங்காமல் தாமதம் ஆனால், ஒப்பந்தப்படி தாமதமாகும் நாட்களுக்கு 15 சதவீத வட்டி சேர்த்து ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும்.

எனவே சக்கரை ஆலை நிர்வாகம் கரும்பு கிரயத்தொகை நிலுவை உள்ள விவசாயிகளுக்கு, 15 சதவீத வட்டியுடன் சேர்த்து நிலுவைத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 29 March 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்