/* */

பரமத்தி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

பரமத்தி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

பரமத்தி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள வீரணம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுகுமார் (42), விவசாயி. அவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டுக்கு அருகில் தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு அருகில் இருந்த மின்கம்பியில் நெருப்பு பொறி வந்ததாகவும், அதைப் பார்த்துவிட்டு வருவதாக கூறி தென்னந்தோப்புக்கு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. சுகுமாரைத் தேடி தென்னந்தோப்புக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு மின்கம்பியில் தொங்கி கொண்டிருந்த தென்னை மட்டை மோதி, மின்சாரம் தாக்கி சுகுமாரன் கீழே மயங்கி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அவரை மீட்டு பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதனை செய்த டாக்டர்கள், சுகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Feb 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  2. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  4. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  5. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  6. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  9. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...