ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர்களின் கவனத்திற்கு
ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்கள் தங்களின் மனைவி பெயரை, ஓய்வூதிய உத்தரவில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
கடந்த 1.3.1985-ம் ஆண்டுக்கு முன்னர், ராணுவத்தின் படைப்பணியில் இருந்து ஓய்வு பெற்று, ராணுவ ஓய்வூதியம் பெற்று வரும் முன்னாள் படைவீரர்கள், அவர்களது மனைவியின் பெயரினை ஓய்வூதிய உத்தரவில் பதிவு (எண்டார்ஸ்மெண்ட்) செய்யாமல் இருப்பவர்கள் அதனை பதிவு செய்வதற்கு முன்னாள், படைவீரர்களின் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு உத்தரவு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகிய அசல் ஆவணங்களுடன் நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04286-233079 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.