நாமக்கல்லில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு
நாமக்கல் நகருக்கு வருகை தந்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
HIGHLIGHTS
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் நடை பயணம் மேற்கொண்டு, சட்டசபை தொகுதி வாரியாக பொது மக்களை சந்தித்து வருகிறார். அவர் இன்று 28 ம் தேதி சனிக்கிழமை, நாமக்கல் சட்டசபை தொகுதியில் நடை பயணம் மேற்கொள்கிறார்.
இன்று மாலை 4 மணிக்கு நடை பயணத்தில் கலந்துகொள்வதற்காக நாமக்கல் சேலம் ரோட்டில் காம்ப்லெக்ஸ் தியேட்டர் அருகில் வந்தார். அவருக்கு திரளமான பாஜக வினரும், பொதுமக்களும் மேல தாளத்துடன் மாலைகள், பூ கொத்துக்கள், பொன்னாடைகள் அளித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சரியாக மாலை 4 மணிக்கு நடை பயணத்தை துவக்கிய அவர் நாமக்கல் நகரில், சேலம் ரோடு கார்னர், நேதாஜி சிலை, பலபட்டறை மாரியம்மன் கோயில், மெயின் ரோடு, பஸ் நிலையம் வழியாக நடைபயணமாக செல்கிறார். வழி நெடுகிலும் கட்சி தொண்டர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரை அவர் சந்தித்து உற்சாகமாக பேசிக்கிக்கொண்டு செல்கிறார்.
மாலை 5 மணிக்கு அவர் அவர், பஸ் நிலையம் அருகில் பிரச்சார வாகனத்தில் இருந்தவாறு பொதுமக்களிடையே பேசுகிறார். நடை பயணத்தை முன்னிட்டு நாமக்கல் நகரம் முழுவதும் பாஜக கொடிகள் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.