Begin typing your search above and press return to search.
எருமப்பட்டி அருகே தீயணைப்புத்துறையினரின் பேரிடர் மீட்பு, தீ தடுப்பு பயிற்சி முகாம்
நாமக்கல் தீயணைப்புத்துறையினர் சார்பில் எருமப்பட்டி அருகே தீ தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலகம் சார்பில் எருமப்பட்டி அருகே அலங்காநத்தம் பிரிவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீத்தடுப்பு மற்றும் வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களில் சிக்குபவர்களை மீட்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு நிலைய அலுவலர் ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். இதில் தீயணைப்பு வீரர்கள், மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை கையாள்வது குறித்து பயிற்சி அளித்தனர்.
மேலும் வெள்ளத்தில் சிக்கி தண்ணீரில் மூழ்குபவர்களை மீட்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இதில் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தமிழரசி மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.