சைபர் கிரைம் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு வீடியோ குறும்படம்: நாமக்கல் மாவட்டத்திற்கு முதலிடம்
தமிழக அளவில் சைபர் கிரைம் குற்றத் தடுப்பு தொடர்பான, சிறந்த விழிப்புணர்வு வீடியோ தயாரிப்பிற்காக நாமக்கல் மாவட்ட காவல்துறைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
தமிழக அளவில் சைபர் கிரைம் குற்றத் தடுப்பு தொடர்பான, சிறந்த விழிப்புணர்வு வீடியோ தயாரிப்பிற்காக நாமக்கல்மாவட்ட போலீஸ் துறைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
நாடு முழுவதம் பெருகி வரும், சைபர் குற்றத் தடுப்பு சம்மந்தமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தரமான வீடியோ படம் தயாரித்து வழங்க மாநில போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து மாவட்ட எஸ்.பிக்களுக்கு உத்தரவிட்டார். இதையொட்டி, அனைத்து மாவட்டக் காவல் துறை வாரியாக தயாரித்து அனுப்பப்பட்ட வீடியோ குறும்படங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில், 24 மாவட்ட வீடியோக்கள் தகுதி பட்டியலில் இடம் பெற்றன. அவற்றில் நாமக்கல் மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு வீடியோ மாநில அளவில் முதலிடம் பெற்றது. விருதுநகர் மாவட்டம் இரண்டாமிடத்தையும், சேலம், திருப்பத்தூர் மவாட்டங்கள் மூன்றாமிடத்தையும் பெற்றன.