Begin typing your search above and press return to search.
நாமக்கல் மாவட்டத்தில் மின் வாரியம் சார்பில் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் மின்சார வாரியத்தின் சார்பில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய, நாமக்கல் வட்ட மேற்பார்வைப் பொறியாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் சார்பில் மாதாந்திர மக்கள் குறைதீர் கூட்டம் கோட்ட அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்கான குறைதீர் கூட்டம் வருகிற 8ம் தேதி புதன்கிழமை பரமத்திவேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. 15ம் தேதி புதன்கிழமை திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 22ம் தேதி புதன்கிழமை இராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. மின்சார விநியோகம் சம்மந்தப்பட்ட குறைகளை அந்தந்த கோட்ட அலுவலகங்களில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்கள் நேரடியாக மனு அளித்து தீர்வு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.