நாமக்கல் மாவட்டத்தில் பொதுத்தேர்வு பணிகள்: கல்வித்துறை சார்பில் ஆலோசனை
நாமக்கல் மாவட்டத்தில் பொதுத்தேர்வுகளை திறம்பட நடத்துவது குறித்து கல்வித்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 10, 11 மற்றும், பிளஸ் 2 பொது தேர்வுக்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர்கள் ராமன், விஜயா தேர்வுத்துறை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் மாவட்ட சிஇஓ மகேஸ்வரி கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசியனார். அப்போது, பொதுத்தேர்வின்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். தேர்வின் போது விதிமுறைகளை தவறாமல் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து செய்முறை தேர்விற்கான புறத்தேர்வாளர் மற்றும் அகத்தேர்வாளர்களுக்கு பணி உத்தரவுகள் வழங்கப்பட்டது.
இதில் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மணிவண்ணன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன், பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.