நகர்ப்புற தேர்தலுக்காக 10 பேர் கொண்ட பூத் கமிட்டி: திமுக கூட்டத்தில் தீர்மானம்
நாமக்கல்லில் நகர்ப்புற தேர்தல் பணிக்காக 10 பேர் கொண்ட பூத் கமிட்டி. மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற தேர்தல் பணிக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைப்பதென்று மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சேயற்குழுக் கூட்டம், அவைத்தலைவர் உடையவர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி, சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மøறைந்த முதல்வர் கருணாநிதிக்கு பக்க பலமாக இருந்து, திமுக பொதுச்செயலாளராக நீண்ட நாட்கள் பணியாற்றி மறைந்த அன்பழகனின் பிறந்த நாõள் நூற்றாண்டு தொடக்கத்தை குறிக்கும் வகையில் சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்திற்கு க.அன்பழகனம் மாளிகை என்று பெயர் சூட்டி, அவரின் சிலையை திறந்து வைத்த, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் அவரின் நூற்றாண்டு விழாவை ஒரு ஆண்டுகள் கொண்டாடுவதென்று மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக முதல்வரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில், விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், நாமகக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெறும் வகையில், பணியாற்றிட வசதியாக ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 10 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைப்பதென்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் விமலா சிவக்குமார், மாநில நிர்வாகிகள் மணிமாறன், ராணி, முன்னாள் எம்.பி சுந்தரம், டாக்டர் மாயவன், வக்கீல் செல்வம், மாவட்டமகளிரணி அமைப்பாளர்ராணி, நாமக்கல் நகர பொறுப்பாளர்கள் ராணா ஆனந்த் ,பூபதி, சிவக்குமார், ராசிபுரம் நகர செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர்கள் பழனிவேல், ஜெகநாதன், நவலடி, பாலு, கவுதம், ராமசாமி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.