Begin typing your search above and press return to search.
அதிமுக பிரமுகர் வீட்டில் சேலைகள் பறிமுதல்
பொதுமக்களுக்கு வழங்குவதற்கு வைத்திருந்த சேலைகள் பறிமுதல்
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மல்லசமுத்திரம் ஒன்றியம் பள்ளக்குளியில் ஆட்டோ ஒன்றில் சுமார் 10 சாக்கு பை மூட்டை லோடுகளை முன்னாள் அதிமுக பள்ளக்குழி ஊராட்சித்தலைவர் காந்திமதி செல்வகுமார் வீட்டில் இறக்கி கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு திமுகவினர் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த சேலைகள் என தெரியவந்தது. இதனையடுத்து நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் AKP சின்ராஜ் சம்பவ இடத்திற்கு வந்து சேலைகள் கொடுப்பதை தடுத்து நிறுத்த முற்பட்டபோது இரு தரப்பினரிடைய கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த சரவணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல் துறையினர் சேலை மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.