/* */

முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி..!

முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி  மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி..!
X

முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள், நாமக்கல் அருகே உள்ள மரூர்ப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு, கிராம வளங்கள் குறித்து படங்கள் வரைந்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.


நாமக்கல்,

முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள், நாமக்கல் அருகே கிராமத்தில் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

பி.எஸ்சி., வேளாண்மை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் கிராமப்புறம் வேளாண்மை குறித்து நேரடியாக தெரிந்துகொள்ள்ளும் வகையில் கிராமங்களில் தங்கி பயிற்சி பெறுவது கட்டாயமாகும். திருச்சி மாவட்டம் முசிறி எம்ஐடி வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கிராமங்களில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டம் மரூர்ப்பட்டி பஞ்சாயத்து பகுதிகளில் தங்கி, வேளாண்மை குறித்த இருந்து பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயிற்சியில் ஒருபகுதியாக மாணவர்கள், மரூர்ப்பட்டி பஞ்சாயத்து தலைவர் சுசீலா மற்றும் துணைத் தலைவர் துரைசாமி தலைமையில், ஊர் பொது மக்களின் வழிகாட்டுதலோடு பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு (பிஆர்ஏ) பயிற்சிகள் மேற்கொண்டனர். பயிற்சியில் மரூர்ப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு கிராம வரைபடம் மற்றும் கிராமத்தின் வளங்கள் குறித்து படங்களை வரைந்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.

Updated On: 4 May 2024 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...