/* */

வே.க.பட்டி அருகே தனியார் கல்லூரி 0பஸ்சுக்கு தீ: இளைஞர் கைது

வே.க பட்டி அருகே தனியார் கல்லூரி பஸ்சுக்கு தீ வைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

வே.க.பட்டி அருகே தனியார் கல்லூரி   0பஸ்சுக்கு தீ:  இளைஞர் கைது
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூர் தேவேந்திரர் தெரு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி ( 44). இவர் கடந்த 2 ஆண்டுகளாக ராசிபுரம் அருகே உள்ள ஒரு தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி பஸ்சில் பணிக்கு சென்ற கந்தசாமி, மாணவ, மாணவிகளை வீடுகளில் இறக்கி விட்டு கல்லூரி பஸ்சை தனது வீட்டிற்கு அருகே நிறுத்தி வைத்திருந்தார்.

இரவு சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த கந்தசாமி வெளியே வந்து பார்த்தபோது 2 பேர் பஸ்சின் வலது பின்பக்க டயர் பகுதியில் தீ வைத்து விட்டு தப்பி ஓடினர். உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்த கந்தசாமி இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அங்கு வந்த கல்லூரி பஸ் மேலாளர் வைத்தியநாதன் இது குறித்து, வேலகவுண்டன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பஸ்சுக்கு தீ வைத்தது புத்தூர் தேவேந்திரர் தெருவை சேர்ந்த மயில் மகன் மோகன் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து மோகனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 18 July 2022 4:20 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...