/* */

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 61,753 பேருக்கு தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற 15ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 61,753 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 61,753 பேருக்கு தடுப்பூசி
X

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 13,84,300 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி 10,69,504 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 6,65,033 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நடைபெற்ற 14 கட்ட தடுப்பூசி முகாம்களில் 5,50,043 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 15ஆம் கட்ட தடுப்பூசி முகாம் 505 இடங்களில் நடைபெற்றது. இந்த மையங்களில், சுமார் 4 ஆயிரம் பேர் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மொத்தம் 61,753 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூடபோடாதவர்களும், முதலாம் தவணை செலுத்தி முடித்து இரண்டாம் தவணைக்காக நிலுவையில் உள்ளவர்களும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று, தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

Updated On: 19 Dec 2021 2:13 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...