Begin typing your search above and press return to search.
இலவச மடிக்கணினியை வழங்ககோரி ஆர்ப்பாட்டம்
மடிக்கணினி இல்லாமல் 2 ஜிபி டேட்டா கார்டை வைத்து என்ன செய்வது? -இந்தியமாணவர் சங்கத்தினர்.
HIGHLIGHTS
அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளாகியும் மடிக்கணினி வழங்காததை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தமிழகஅரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான மாணவர்கள் உயர்கல்விக்கு ஏதுவாக இருந்தது.
ஆனால், 2017 - 18 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு 3 ஆண்டுகளாகியும் தற்போது வரை மடிக்கணினி வழங்கவில்லை, தற்போது தமிழகஅரசு 2 ஜிபி டேட்டா கார்டு இலவசம் என அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. மடிக்கணினி இல்லாமல் 2 ஜிபி டேட்டா கார்டை வைத்து என்ன செய்வது எனவும் கேள்வி எழுகிறது. எனவே உடனடியாக 2017 - 18 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்களுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்கி ஆவணம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களும் எழுப்பினர்.