/* */

இலவச மடிக்கணினியை வழங்க‌கோரி ஆர்ப்பாட்டம்

மடிக்கணினி இல்லாமல் 2 ஜிபி டேட்டா கார்டை வைத்து என்ன செய்வது? -இந்தியமாணவர் சங்கத்தினர்.

HIGHLIGHTS

இலவச மடிக்கணினியை வழங்க‌கோரி  ஆர்ப்பாட்டம்
X

அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளாகியும் மடிக்கணினி வழங்காததை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.‌ இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தமிழகஅரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான மாணவர்கள் உயர்கல்விக்கு ஏதுவாக இருந்தது.

ஆனால், 2017 - 18 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு 3 ஆண்டுகளாகியும் தற்போது வரை மடிக்கணினி வழங்கவில்லை, தற்போது தமிழகஅரசு 2 ஜிபி டேட்டா கார்டு இலவசம் என அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. மடிக்கணினி இல்லாமல் 2 ஜிபி டேட்டா கார்டை வைத்து என்ன செய்வது எனவும் கேள்வி எழுகிறது. எனவே உடனடியாக 2017 - 18 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்களுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்கி ஆவணம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களும் எழுப்பினர்.
Updated On: 20 Jan 2021 11:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.