Begin typing your search above and press return to search.
கிருஷ்ணகிரி: ரூ. 1.07 லட்சம் மதிப்பு மதுபாட்டில்கள் லாரியுடன் பறிமுதல்
கிருஷ்ணகிரி வழியாக தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1.07 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை, லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
கர்நாடகாவில் ஊரடங்கு தளர்வையொட்டி மதுக்கடைகள், காலையில் குறிப்பிட்ட நேரம் திறந்து விற்பனை செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, சரக்கு வாகனங்களில் கர்நாடகாக மாநில மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து, சிலர் தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மதுவிலக்கு பிரிவு போலீஸ் எஸ்.ஐ குமார் தலைமையில் எஸ்எஸ்ஐக்கள் அறிவழகன், முனுசாமி, கண்ணன், வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழுவினர், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி கூட்ரோடு அருகில், வாகனத்தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 38 பெட்டி மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 1,392 குவாட்டர் மது பாட்டில்களும், 432 பிளாஸ்டிக் குவார்ட்டர் மது பாட்டில்களும் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ. ஒரு லட்சத்து 7 ஆயிரம் ஆகும்.
மது பாட்டில்களையும், கடத்தி வர பயன்படுத்தப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான லாரியையும் பறிமுதல் செய்த போலீசார், லாரி டிரைவரான கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மஞ்சப்புத்தூரை சேர்ந்த கருணாகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.