/* */

கிருஷ்ணகிரியில் கொரோனா நிலவரம் எப்படி? ஒரேநாளில் 423 பேர் பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 423 பேர் பாதிக்கப்பட்டனர்; 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரியில் கொரோனா நிலவரம் எப்படி?  ஒரேநாளில் 423 பேர் பாதிப்பு
X

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 850 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். 3 பேர் இறந்துள்ளனர்.

இது தொடர்பாக, தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 55 வயது ஆண், கொரோனா பாதிப்புடன் சேலம் தனியார் மருத்துவமனையில் கடந்த 28ம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அதே போல 60 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கடந்த 24ம் தேதி அனுமதிக்கப்பட்டு இறந்தார். மேலும், 40 வயது ஆண் ஒருவர் கொரோனா பாதிப்புடன் கடந்த 15ம் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 203 ஆக உள்ளது.

இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் 33 ஆயிரத்து 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 28 ஆயிரத்து 361 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 4 ஆயிரத்து 603 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 203 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 2 Jun 2021 2:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது