கிருஷ்ணகிரியில் கொரோனா நிலவரம் எப்படி? ஒரேநாளில் 423 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 423 பேர் பாதிக்கப்பட்டனர்; 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 850 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். 3 பேர் இறந்துள்ளனர்.
இது தொடர்பாக, தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 55 வயது ஆண், கொரோனா பாதிப்புடன் சேலம் தனியார் மருத்துவமனையில் கடந்த 28ம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அதே போல 60 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கடந்த 24ம் தேதி அனுமதிக்கப்பட்டு இறந்தார். மேலும், 40 வயது ஆண் ஒருவர் கொரோனா பாதிப்புடன் கடந்த 15ம் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 203 ஆக உள்ளது.
இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் 33 ஆயிரத்து 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 28 ஆயிரத்து 361 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 4 ஆயிரத்து 603 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 203 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.