/* */

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சோமவார பிரதோஷத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவன் அருள் பெற்றனர்.

HIGHLIGHTS

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
X

சிறப்பு அலங்காரத்தில் நந்தி.

சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சிவஆலயங்களில் இன்று சோமவாரப்பிரதோஷம் நடைபெறுகிறது. மற்ற பிரதோஷ நாட்களைவிட சனிப்பிரதோஷம் மற்றும் சோமவார பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. இத்தகைய சிறப்பு வாய்ந்த சோமவார பிரதோஷத்தில் தை மாத சோமவார பிரதோஷ நிகழ்ச்சி மிகவும் விமர்சையானதாகும்.

தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில், மிகவும் சிறப்பு வாய்ந்த சிவாலயமாகவும், மிகவும் தொன்மை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகவும் இருப்பது கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவள்ளி, அருள்மிகு ஸ்ரீ செளந்தரநாயகி உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் ஆகும். தை மாத கடைசி பிரதோஷம் மற்றும் தை மாத சோமவார பிரதோஷ நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆலயத்தில் ஈஸ்வரனுக்கு முன்னர் அமைந்து வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ நந்தி எம்பெருமானுக்கு விஷேச பூஜைகளும், கும்ப ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, கற்பூர ஆரத்தி, கோபுர ஆரத்திகளை தொடர்ந்து மஹா தீபாராதனை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கடவுள் அருள் பெற்றனர். இதனை தொடர்ந்து பிரதோஷ நாயனார், சுவாமி அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் ஆலயத்திற்குள் வீதி உலா வந்தார். இந்நிகழ்ச்சியில் சிவாச்சாரியார்கள் சூழ, ஓதுவார் திருவாசகம் படிக்க, விஷேச சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.

Updated On: 14 Feb 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  3. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  4. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  5. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  6. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  8. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  9. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு