ஏடிஎம் மிஷின் முறையாக பராமரிக்கப்படாததால் அச்சத்தை ஏற்படுத்தும் அலாரம்
கரூரில் ஏ டி எம் மிஷின் முறையாக பராமரிக்கப்படாததால் நினைத்த நேரங்களில் அலாரம் அடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
HIGHLIGHTS
கரூர் - திண்டுக்கல் சாலையில் தாந்தோன்றிமலை மில்கேட் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும், அதன் அருகில் அந்த வங்கியின் ஏ டி எம் மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இன்று இரவு சுமார் 8 மணியளவில் தானாக அலாரம் அடிக்க துவங்கியது.
இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்சியடைந்து அந்த மையத்தை பார்த்த போது அதில் யாரும் இல்லை. ஆனால், அலாரச் சத்தம் நிற்காமல் 1 மணி நேரத்திற்கும் மேலாக அடித்துள்ளது.
இதனையடுத்து அருகில் உள்ள வங்கியின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த வங்கி ஊழியர்கள் அலாரத்தை நிறுத்தி விட்டு சென்றனர்.
தொடர்ந்து இந்த ஏ டி எம் மிஷினில் இருந்து இரவு, பகல் பாராமல் அடிக்கடி தொடர்ந்து அலாரம் அடிப்பதால் அருகில் வசிப்பவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாகவும், அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.