/* */

தானுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி பெருவிழா கொடியேற்றத்துடன் தாெடக்கம்

குமரி மாவட்டம் சுசீந்திரம் தானுமாலயன் சுவாமி கோவில் திருவிழா தொடங்கிய நிலையில் பக்தர்களின் சரணகோஷங்களால் களைகட்டியது .

HIGHLIGHTS

தானுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி பெருவிழா கொடியேற்றத்துடன் தாெடக்கம்
X

சுசீந்திரம் தானுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தாெடங்கியது.

இந்து தெய்வங்களில் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மூன்று மூர்த்திகளும் ஒரே கோவிலில் ஒரே கருவறையில் ஒரே சிற்பத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் கோவிலாகவும் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றாகவும் சுமார் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும் காணப்படுகின்றது சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி பெருந்திருவிழாவானது புகழ் பெற்ற ஒன்றாக அமைந்துள்ளது, அதன்படி இந்த வருடத்திற்கான மார்கழிப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பாரம்பரிய மரபுப்படி கோட்டார் பட்டாரியர் சமுதாய விநாயகர் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட கொடிக்கும் கொடி மரத்திற்க்கும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரம், பஞ்சவாத்தியம் மேளதாளங்கள், பக்தர்களின் சரண கோஷம் முழங்க திருகொடியேற்றமானது நடைபெற்று மார்கழி பெருந்திருவிழா தொடங்கியது. மூன்றாம் திருவிழாவான வரும் 15ம் தேதி திங்கள்கிழமை மக்கள் சந்திப்பு நடைபெற உள்ளது, இதே போன்று திருவிழா நடைபெறும் பத்து நாட்களும் சுவாமி ரிஷப வாகனம் கருட வாகனம் பரங்கி நாற்காலி வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்து வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற திரு கொடியேற்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 11 Dec 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  3. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  4. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  6. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  7. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...