/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காஞ்சிபுரத்தில் இன்று 20 பேர் வேட்பு மனு தாக்கல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 20 பேர் மனு செய்த நிலையில் இதுவரை 34 பேர் வேட்பு மனு தாக்கல்.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காஞ்சிபுரத்தில் இன்று 20 பேர் வேட்பு மனு தாக்கல்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, இரண்டு நகராட்சி, 3 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்பு மனு கடந்த வெள்ளிக்கிழமை அந்தந்த அலுவலகங்களில் துவங்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம்156 உறுப்பினர்கள் தேர்வு செய்ய உள்ளனர். முதல் இரு நாட்கள் ஒரு வேட்புமனு தாக்கல் ஆகாத நிலையில் நேற்று 13 நபர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் 7 வேட்பு மனுக்களும், குன்றத்தூர் நகராட்சியில் இரண்டு வேட்பு மனுக்களும், மாங்காடு நகராட்சியில் 9 வேட்பு மனுக்களும், ஸ்ரீபெரும்புதூரில் இரண்டு வேட்பு மனுக்களும் பெறப்பட்டது. உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் பேரூராட்சியில் ஒருவர்கூட மனு தாக்கல் செய்யவில்லை.

இதுவரை காஞ்சிபுரம் மாநகராட்சி 10 வேட்பு மனுக்களும், குன்றத்தூர் நகராட்சியில் இரண்டு வேட்பு மனுக்களும், மாங்காடு நகராட்சி 12 வேட்பு மனுக்களும், உத்திரமேரூர் பேரூராட்சியில் இரண்டு மனுக்களும், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 8 என மொத்தம் 34 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு உள்ளது.

இதுவரை கடந்த நான்கு நாட்களில் வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் ஒருவர்கூட வேட்பு மனு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 1 Feb 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  7. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  8. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்
  9. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  10. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை