Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, பக்தர்கள் பங்கேற்பு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் காலபைரவருக்கு அஷ்டமி வளர்பிறை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்
HIGHLIGHTS
பைரவர் என்றாலே பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். வளர்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லா வித கஷ்டங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. நேற்றைய தினம் அனைத்து சிவாலயங்களிலும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
அவ்வகையில் காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் அமைந்துள்ள காலபைரவருக்கு சந்தனம் , இளநீர், பழவகைகள், பால், தயிர் மற்றும் அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைற்றது.
அதன் பின் மலர் அலங்காரத்தில் பைரவருக்கு தீபம் ஆராதனை நடைபெற்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா குழுவின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.