/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 68 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது எஸ்.பி சுதாகர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 68 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக எஸ்பி சுதாகர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 68 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது  எஸ்.பி சுதாகர்
X

 காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகரன் ( பைல் படம்)

காஞ்சிபுரம் காவல் மாவட்டம் என்பது காஞ்சிபுரம் வாலாஜாபாத் உத்தரமேரூர் சுங்குவார்சத்திரம் ஸ்ரீபெரும்பத்தூர் சோமங்கலம் ஒரகடம் என பல பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

இதில் ஸ்ரீபெரும்புதூர் கோட்டம் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதாலும் சென்னையை ஒட்டி இதன் எல்லைகள் அமைந்துள்ளதால் குற்ற செயல்கள் கண்காணிப்பதில் காவல்துறைக்கு பெரும் சிக்கலான ஒன்று.

தொழிற்சாலைகளில் ஒப்பந்தப் பணி பெறுவதில் கடும் போட்டி காரணமாக குற்ற செயல்கள் அதிகரித்து காணப்படும்.

இந்நிலையில் புதியதாக காஞ்சி சரக காவல்துறை துணைத் தலைவர் எம் சத்திய பிரியா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எம்.சுதாகர் பொறுப்பேற்றதும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் ரவுடிகளை கைது செய்ய அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இதனால் குற்ற செயல்கள் குறையும் என்பதும் பொதுமக்கள் பயமின்றி வாழ வழிசெய்யும் வகையில் இருக்கும்.

அவ்வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்நாள்வரை பல்வேறு கொலை, கொலைமுயற்சி, கொள்ளை, மிரட்டல், வழிப்பறி என பல்வேறு வழக்குகளில் சிக்கிய 68 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

இனி வரும் காலங்களில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டாலும், பெண்கள், குழந்தைகள் இவர்களை துன்புறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Updated On: 18 July 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க