உத்திரமேரூரில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம்
எஸ்.பி.சுதாகர் தலைமையில் , ஏடி.எஸ்.பி , டி.எஸ்.பி, ஆய்வாளர்கள் , காவலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்ட ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் உத்திரமேரூரில் மாபெரும் அணிவகுப்பு ஊர்வலம் பல்வேறு வீதிகளில் வழியாக பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்றது.
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் ஆரம்பித்த 99 ஆவது ஆண்டு விழா மற்றும் விவேகானந்தரின் 160 வது பிறந்த தினம் சட்ட மேதை அம்பேத்கரின் 132 வது ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக காஞ்சிபுரம் மாவட்ட ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் உத்திரமேரூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாபெரும் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
முன்னதாக சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் அருகில் இருந்து முன்னாள் ராணுவ வீரரும் ஓய்வு பெற்ற ஐஓபி மேலளாருமான ராஜகோபால் அணிவகுப்பு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
ஊர்வலம் பெரிய செங்குந்தர் தெரு, கரூணீகர் தெரு , வைகுண்ட பெருமாள் கோயில் தெரு, தண்டுக்கார தெரு, வழியாக பேருந்து நிலையம் வந்தடைந்தது.
பேருந்து நிலையத்தில் , துளசி ராமன் ஜோதிடர் முன்னிலையிலும் , களியாம்பூண்டி ராம்குமார் தலைமையில் பொதுக்கூட்டம் கூட்டம் நடைபெற்றது.
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்தினையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் , இணை காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காநிப்பான்ர், ஆய்வாளர்கள் , காவலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் பகுதியில் அசாம்பவிதம் நிகழாவண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதே போல் செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் பகுதியில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.