/* */

பெண்களுக்கு குங்குமம் அளித்து வாக்கு கேட்கும் முஸ்லிம் வேட்பாளர்

காஞ்சிபுரம் மாநகராட்சி 45வது வார்டில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர் பெண்களுக்கு குங்குமம் அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்

HIGHLIGHTS

பெண்களுக்கு குங்குமம் அளித்து வாக்கு கேட்கும் முஸ்லிம் வேட்பாளர்
X

காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ஷம்ஷாத் பெண்களுக்கு குங்குமம் அளித்து வாக்கு சேகரிக்கும் காட்சி

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சைகள் தங்கள் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் 45வது வார்டு மாமன்ற உறுப்பினர் போட்டியிடும் பெண் முஸ்லிம் வேட்பாளரான எஸ்.ஷம்ஷாத் ஆசிரியர் நகர் , அரசு நகர் பகுதிகளில் காலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனக்கு கை சின்னத்தில் வாக்களிக்க கோரி,பெண் வேட்பாளருக்கு குங்குமம் அளித்து காலில் விழுந்து ஆசி பெற்று வாக்கு சேகரித்து வருகிறார்.

முஸ்லிம் பெண் வேட்பாளர் அனைத்து பெண்களுக்கும் குங்குமம் அளித்த வாக்கு கேட்கும் நூதன முறை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 9 Feb 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க