/* */

காஞ்சிபுரம் அருகே காதலனை மிரட்டி கல்லூரி மாணவியிடம் கூட்டு பாலியல் கொடுமை...

காஞ்சிபுரம் அருகே காதலனை மிரட்டி கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே காதலனை மிரட்டி கல்லூரி மாணவியிடம் கூட்டு பாலியல் கொடுமை...
X

காஞ்சிபுரம் விப்பேடு கிராம பகுதியை ஒட்டி வந்தவாசி - கீழம்பி புறவழிச்சாலை அமைந்துள்ளது. இந்தப் புறவழிச் சாலை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த சாலையை ஒட்டி பெட்ரோல் நிலையங்கள், உணவகங்கள், தனியார் பள்ளிகள் என அமைந்துள்ளன. மேலும், புதிய குடியிருப்பு பிளாட்டுக்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் , கல்லூயில் பயிலும் ஒரு காதல் ஜோடி நேற்று மாலை 6.30 மணி அளவில் அந்தப் பகுதியில் உள்ள காலி வீட்டுமனை பகுதியில் பேசிக் கொண்டிருந்தனராம். அப்போது, அந்த வழியாக சென்ற நான்கு வாலிபர்கள் காதல் ஜோடியைக் கண்டதும் மது போதையில் காதலனின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி உள்ளனர். மேலும், அந்தப் பெண்ணை பலவந்தமாக தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர்.

காதலின் கழுத்தில் கத்தி வைத்ததால் செய்வதறியாது கத்தி கதறி அழுதும் கல் மனம் படைத்த மது போதை நபர்கள் அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பின்னர் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தன் பேரில் தாலுக்கா காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகே புறவழிச்சாலையில் இரவு நேரங்களில் போலீஸார் கூடுதல் ரோந்துப் பணிகளை மேற்கொண்டால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 14 Jan 2023 6:18 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  7. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  9. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  10. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்