/* */

காஞ்சிபுரம் : தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டை காஞ்சிபுரம் வணிகர் வீதியில் விற்று வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது
X

காஞ்சிபுரத்தில் லாட்டரி சீட் விற்பனை செய்தவர் கைது.

ஏழை எளிய மக்களின் பணத்தை லாட்டரி சீட்டு மூலம் இழந்து வறுமையில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருவதால் கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வணிகர் வீதியில் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் அப்பகுதியில் உள்ள சுமைதூக்கும் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என பல தரப்பினரிடையே தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் சிவக்குமார் அப்பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டார் அப்போது ராஜ்குமார் கூலித்தொழிலாளிகள் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்து தடைசெய்யப்பட்ட லாட்டரி விறறதாக வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 1 Aug 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  3. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  5. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  6. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  7. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  8. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  9. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  10. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்