பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், ஈஞ்சம்பாக்கத்தில் ரூ.1.62 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேரில் ஆய்வு செய்தார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மாநில அரசின் நிதி மற்றும் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், மாணவர்கள் நல விடுதி சமையலறை கட்டிடங்கள் , பழங்குடி இன மக்களுக்கான தொகுப்பு வீடுகள் , கிராம சாலைகள் இணைப்பு திட்டம், மழைநீர் வடிகால் பணிகள் என பல நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், ஈஞ்சம்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி அருகே ரூ.1.62 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், நேரில் ஆய்வு செய்து, பின்பு ரூ. 1.40 இலட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வரும் நூலக கட்டிடத்தையும் , ரூ.1.10 இலட்சம் சீரமைக்கப்பட்டு வரும் ஊராட்சி மன்ற கட்டிடத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
மேலும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் மாணவ/மாணவியர்கள் பயிலும் வகுப்பறைக்கு சென்று அவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்தார்கள். பள்ளியில் மாணவ/மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவினை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொ) பாபு, மாவட்ட கல்வி அலுவலர் செந்தில் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் சென்று இருந்தனர்.