காரில் கொடியுடன் வலம் வந்த நபர்களை எச்சரித்த பறக்கும் படை குழு
காரில் கட்சி சின்னம் கொடியுடன் வலம் வந்தவர்களை தேர்தல் நன்னடத்தை விதிகளை கடைபிடிக்குமாறு பறக்கும் படையினர் எச்சரித்து அனுப்பினர்
HIGHLIGHTS
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி , பேரூராட்சி பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நன்னடத்தை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் வேண்டுகோள் விடுத்தது.
மேலும் அந்தந்த பகுதிகளில் இருந்த கட்சிக் கொடிக் கம்பங்களில் கொடிகள், தலைவர்கள் சிலை துணிகளை கொண்டு மூடுதல், சுவர் விளம்பரங்களை அழித்தல், கல்வெட்டுகளை மூடுதல், கட்சி கொடிகளை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்டவைகளை கண்காணிக்க அந்தந்த பகுதி தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 பறக்கும் படைகள் சுழற்சி முறையில் இருபத்தி நான்கு மணி நேரமும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அப்போது பல இடங்களில் காரில் கட்சி கொடிகளை அணிவித்தபடி வலம் வந்த நபர்களுக்கு அதை அகற்றும் படியும் , தேர்தல் வாக்குப்பதிவு முடியும் வரை நன்னடத்தை விதிகளை கடைபிடிக்குமாறு இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.