கார் மற்றும் டூவீலர் உதிரி பாகங்கள் எரிப்பதால் சுற்றுச் சூழல் பாதிப்பு
காஞ்சிபுரத்தில் கார் மற்றும் டூவீலர் உதிரி பாகங்களை எரிப்பதால் இந்த பகுதியில் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் தாமல்வார் தெரு பகுதியில் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு பின்புறம் பரந்த வெளியில் பழுதான நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்களிலிருந்து உதிரி பாகங்கள் பிரித்தெடுக்கும் பணியை தனிநபர் ஒருவர் மேற்கொண்டு வருகிறார்.இந்தப் பணியில் குறைந்தபட்சம் பத்து நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் உதிரி பாகங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எலெக்ட்ரிகல் ஓயர்களை ஒரு கும்பலாக சேர்த்தபின் அவை எரியூட்டப்படுகிறது.
இதனால் இதன் அருகே உள்ள குடியிருப்புகள் முழுவதும் பெரும் புகை மூட்டமும் சூழ்ந்து அதனால் மூச்சுத் திணறலும் அப்பகுதியில் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் உதிரி பாகங்கள் பிரிக்கும் பகுதியில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் சிலிண்டர்களை சட்டவிரோதமாக வைத்துக்கொண்டு எரியூட்டும் பகுதி அருகேயே பணிகளை மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் சிறிதேனும் கவனக்குறைவு ஏற்படும் நிலையில் இப்பகுதியில் பெரும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும் குடியிருப்பு வாசிகளுக்கு மூச்சுத் திணறலால் அவ்வப்போது உடல்நல குறைவு ஏற்படுவதாகும் இதுகுறித்து தெரிவித்தும் முறையற்ற செயலை தொடர்ந்து நபர்கள் செய்து வருவதால் காவல்துறை உடனடியாக சட்டவிரோதமாக சிலிண்டர் பயன்படுத்துவதை பறிமுதல் செய்தும்,
சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் செயல்படுவதால் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து பாதுகாப்பான முறையில் பணி செய்ய அறிவுறுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..