/* */

அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி காஞ்சியில் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி குழு சார்பில் காஞ்சிபுரம் செய்யாறு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி காஞ்சியில் ஆர்ப்பாட்டம்
X

காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே ஐக்கிய விவசாயிகளின் முன்னணி காஞ்சி மாவட்ட குழு சார்பில் அக்னிபாத் திட்டத்தை கைவிடக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் குறைந்த கால ஆண்டுகளில் பணி வழங்க அக்னிபாத் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இளைஞர்களை சீரழிக்கும் திட்டம் என எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வன்முறைகளுடன் நடந்து முடிந்தது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஐக்கிய விவசாயிகளின் முன்னணி சார்பில் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே நந்தகோபால் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சார்ந்த நேரு , பெருமாள் மற்றும் வாலிபர் சங்கத்தை சேர்ந்த உதயகுமார் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இதன்பின் மத்திய அரசு உடனடியாக இந்த திட்டத்தை கைவிட கோரி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Updated On: 24 Jun 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க