/* */

கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 இடங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது

HIGHLIGHTS

கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு  முகாம்
X

 காஞ்சிபுரம் பி.எஸ்.எஸ் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாள்தோறும் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசுத்துறை சார்பில் நாள்தோறும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 3680 உறுப்பினர்களூக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் , ஸ்ரீபெரும்புதூர் வாலாஜாபாத் மற்றும் குன்றத்தூர் என ஐந்து இடங்களிலும் , செங்கல்பட்டு, திருப்போரூர், சோழிங்கநல்லூர், வண்டலூர், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட 9 இடங்களில் 14 தடுப்பூசி முகாம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்று காஞ்சிபுரம் பி .எஸ். எஸ். சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தொழிலாளர் உதவி ஆணையர்(ச.பா.தி)செண்பகராமன் மற்றும் உதவி ஆணையர்(அமலாக்கம்) லிங்கேஸ்வரன் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர். இம்முகாமில், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் கலந்துக கொண்டு, கட்டுமான தொழிலாளர்களின் உடல் நிலையைபரிசோதித்த பின்னர் தடுப்பூசி செலுத்துகின்றனர்.


Updated On: 30 Aug 2021 8:18 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!