/* */

பிசி, எம்பிசி, சீர்மரபினர்கள் நவீன சலவையகம் அமைக்க நிதியுதவி

10 பேர் இணைந்து குழு அமைத்து சலவையகம் அமைக்க, உபகரணங்கள் வாங்க ரூ 3 லட்சம் துறை மூலம் வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

பிசி, எம்பிசி, சீர்மரபினர்கள் நவீன சலவையகம் அமைக்க நிதியுதவி
X

மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்ட செய்தி குறிப்பில் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், மேற்கண்ட இன மக்களில் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து, நவீன சலவையகங்கள் அமைக்க தலா ரூ.3 இலட்சம் வீதம் தமிழகம் முழுவதும் 25 அலகுகள் ஏற்படுத்த அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் பிவ, மிபிவ (ம) சீம வகுப்பை சார்ந்த (ஆண்/பெண்) 10 நபர்களை கொண்டு ஒரு குழு அமைத்து அக்குழுவிற்கு நவீன முறை சலவையகம் அமைக்க தேவைப்படும் உபகரணங்கள் வாங்க அதற்கான நிதி தோராயமாக பின்வருமாறு வழங்கப்படும். Washing Machine (10Kg) ரூ.1,00,000/-, Dryer (10Kg)- ரூ.75,000/-, Industrial Ironing Table (Table, Steamer and Iron box) ரூ.50,000/-, Table - ரூ.5,000/-, Desk - ரூ.10,000/-, இடைநிகழ் செலவினம் ரூ.30,000/- மற்றும் பணி மூலதனம் ரூ.30,000/- ஆக மொத்தம் ஒரு குழுவிற்கான தோராய செலவினம் ரூ.3,00,000/- வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பங்கு கொள்ள ஆர்வமாக உள்ளவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Sep 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  2. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  4. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  5. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  8. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  9. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  10. வீடியோ
    🤐ரகசியத்தை இப்போ சொல்ல முடியாது |🤔Savukku வழக்கறிஞர் தடாலடி !...