/* */

பணத்திற்கும் கணக்கிற்கும் முரண்பாடு ஏற்பட்டதால் ரூ 25.60 லட்சம் பறிமுதல்

வாலாஜாபாத் ரவுண்டானா அருகே நிலை கண்காணிப்பு குழு வாகன சோதனையில் ஈடுபட்ட போது ரூ.25.6 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

பணத்திற்கும் கணக்கிற்கும் முரண்பாடு ஏற்பட்டதால் ரூ 25.60 லட்சம் பறிமுதல்
X

பணம் பறிமுதல் செய்யப்பட்ட தனியார் கடையின் வாகனம்.

தனியார் தங்க நகை விற்பனையகம் கொண்டு சென்ற பணத்தில் இருப்புக்கும், கணக்கிற்கும் மாறுபாடு இருந்ததால் நிலைக் குழு கண்காணிப்பு ரூபாய் 25.60 லட்சத்தை பறிமுதல் செய்து உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

தமிழகம் முழுவதும் இயங்கும் பிரபல தங்க நகை விற்பனை மையமாக செயல்பட்டு வரும் ஜி ஆர் டி ஜூவல்லரி காஞ்சிபுரம் கிளையில் இருந்து ரூபாய் 25.60 லட்சம் மதிப்பிலான பணம் சென்னை திருவான்மியூர் எச்டிஎப்சி வங்கியில், தலைமை அலுவலக கணக்கில் செலுத்த ஊழியர்கள் இன்று மதியம் ஒரு மணி அளவில் எடுத்துச் சென்றனர்.

வாலாஜாபாத் ரவுண்டானா அருகே சென்ற போது தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர் சகுந்தலா தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டினர்.

அவ்வழியாக வந்த நகைக்கடை வாகனத்தை நிறுத்தி சோதனை இட்ட போது அதில் ரூபாய் 25 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் இருப்பு இருந்ததாகவும், ஆனால் அதற்கான ஆவணங்களில் 29 லட்சம் என காட்டப்பட்டதால் இந்த மாறுபாடு குறித்து தகவல் ஊழியர்கள் சரிவர அளிக்காததால் அவ்வாகனத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் பாலாஜியிடம் ஒப்படைத்தனர்.

இதனை அடுத்து ஜி ஆர் டி ஜூவல்லரி நிறுவனத்தின் ஊழியர்கள் அதற்கான ஆவணங்களை எடுத்து வர சென்று ஓரிரு மணி நேரத்தில் அதை சமர்ப்பிப்பதாக தெரிவித்ததின் பேரில் தற்போது அந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

கொண்டு சென்ற பணத்திற்கும் , அதற்கான ஆவணங்களில் குறிப்பிட்ட தொகையும் மாறுபாடு காரணமாகவே பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அலுவலர் தெரிவித்தார்.

மேலும் முறையாக ஆவணங்கள் செலுத்தாததால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் வைக்கப்பட்டது.

Updated On: 5 April 2024 2:13 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது