Begin typing your search above and press return to search.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 மணி நேரம் ரேஷன் கடைகள் இயங்கும்: ஆட்சியர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 மணி நேரம் ரேஷன் கடைகள் இயங்கும் என ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி : தீபாவளி பண்டிகையையொட்டி, இன்று முதல் 3 நாட்களுக்கு, காலை 8:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியிர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு உத்தரவு படி தீபாவளி பண்டிகையையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் இன்று முதல் வரும் 3ம் தேதி வரை 3 நாட்களுக்கு காலை 8:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை திறந்து, அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.
இதனை பயன்படுத்தி பொது விநியோக திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோக திட்ட பொருட்களை பெற்று ரேஷன் கார்டுதாரர்கள் பயனடையலாம். பண்டிகைக்கு முன்னதாக பொருட்கள் வாங்காதவர்கள், வரும் 8ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.