/* */

அந்தியூரில் 20 ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சை

அந்தியூர் வட்டாரம் அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அந்தியூரில் 20 ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சை
X

ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சை முடிந்த பிறகு உடல் நலம் குறித்து மருத்துவர் சக்திகிருஷ்ணன் கேட்டறிந்த போது எடுத்த படம்.

அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாரம் அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆண்களுக்கான நவீன வாசக்டமி கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற முகாமில் குடும்ப நல துணை இயக்குனர் ராஜசேகரன் கலந்து கொண்டார். முகாமில், பெருந்துறை பவானி அரசு மருத்துவமனைகளில் இருந்து வந்திருந்த அரசு மருத்துவர்கள், 20 ஆண்களுக்கு வாசக்டமி நவீன கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர். முகாமில் மருத்துவ அலுவலர்கள் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் சுகாதாரத் துறையில் ஒரு புதிய சாதனையாக 20 பேருக்கு வாசக்டமி கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சென்ற வருடம் அந்தியூர் வட்டாரத்தில் மாவட்டத்தில் அதிக அளவாக 18 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், இந்த வருடம் அந்த சாதனையை முறியடித்து, அந்தியூர் வட்டாரத்தில் 20 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணனை மருத்துவத்துறையினர் பாராட்டி வருகின்றனர்.

Updated On: 26 May 2023 3:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  2. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  3. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  7. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  8. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  10. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...