திண்டுக்கல் அருகே போக்சோ வழக்கில் இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை
திண்டுக்கல் அருகே போக்சோ வழக்கில் இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
HIGHLIGHTS
திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2021 ஆம் ஆண்டு கடத்தி சென்று பாலியல் சீண்டல் செய்ததாக குமரேசன்(25). என்பவரை, தாடிக்கொம்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு, திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்ததது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி, தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் இந்த வழக்கினை நடத்தினர். உரிய ஆவணங்கள் ஆதாரங்களை தாக்கல் செய்து இருந்தனர். அரசு வழக்கறிஞர் ஜோதி இந்த வழக்கில் போலீசார் தரப்பில் ஆஜராகி வாதாடினார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவுற்று இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட குமரேசனுக்கு, 23 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.