/* */

திண்டுக்கல் அருகே போக்சோ வழக்கில் இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல் அருகே போக்சோ வழக்கில் இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

HIGHLIGHTS

திண்டுக்கல் அருகே போக்சோ வழக்கில் இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை
X

திண்டுக்கல் மகிளா நீதிமன்றம்.

திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2021 ஆம் ஆண்டு கடத்தி சென்று பாலியல் சீண்டல் செய்ததாக குமரேசன்(25). என்பவரை, தாடிக்கொம்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு, திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்ததது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி, தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் இந்த வழக்கினை நடத்தினர். உரிய ஆவணங்கள் ஆதாரங்களை தாக்கல் செய்து இருந்தனர். அரசு வழக்கறிஞர் ஜோதி இந்த வழக்கில் போலீசார் தரப்பில் ஆஜராகி வாதாடினார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவுற்று இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட குமரேசனுக்கு, 23 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Updated On: 6 Nov 2023 1:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது