/* */

18+ வயதினருக்கு தடுப்பூசி போடும் பணி - திண்டுக்கல் கலெக்டர் ஆய்வு

திண்டுக்கல்லில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

18+ வயதினருக்கு தடுப்பூசி போடும் பணி - திண்டுக்கல் கலெக்டர் ஆய்வு
X

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில், திண்டுக்கல் மாவட்டத்திலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இதில் முதற்கட்டமாக, முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அதன்படி அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் 14 வட்டார சுகாதார நிலையங்கள் மூலமாகவும், சிறப்பு முகாம் நடத்தியும் தடுப்பூசி போடப்படுகிறது. மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் தோமையார்புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடந்தது. இதனை, மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து காமலாபுரத்தில் நடைபெற்ற காய்ச்சல் பரிசோதனை முகாமுக்கு சென்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Updated On: 28 May 2021 4:43 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  6. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  7. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  10. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி