/* */

திமுக அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் பஞ்சப்படி வழங்காத திமுக அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திமுக அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள்.

திண்டுக்கல் மின் வாரிய அனைத்து தொழில் சங்கங்களின் கூட்டு குழு சார்பாக மத்திய அரசு அறிவித்த பஞ்சப்படி உயர்வினை திமுக அரசு ஒர் ஆண்டுக்கு நிறுத்தி வைத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் முத்தையா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்த்தில் திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இது குறித்து கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் முத்தையா தெரிவிக்கையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போதெல்லாம் பஞ்சப்படி அறிவிக்கின்றதோ அதேபோன்று தமிழக அரசும் வழங்கி வந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி அறிவித்தவுடன் மாநில அரசும் வழங்கி வந்தது.

ஆனால், தற்போது ஆட்சி புரிந்து வருகின்ற திமுக அரசு இந்த வருடம் பஞ்சப்படி கிடையாது. அடுத்த வருடம் தான் என அறிவித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இச்செயல் மின்வாரிய ஊழியர்களின் வயிற்றில் அடித்தது போலாகும். கொரோனா காலத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது பணியாற்றிய மின்வாரிய ஊழியர்களை வஞ்சிப்பதை திமுக அரசு நிறுத்தி விட்டு உடனடியாக பஞ்சப்படி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மின்சார பிரிவு அண்ணா தொழிற்சங்க திட்ட செயலாளர் பாலாஜி பிரபு, ஹிந்து மஸ்தூர் சபா சங்க மாவட்ட செயலாளர் சையது இப்ராஹிம், தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் சம்மேளன மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன், மத்திய அலுவலக சங்க செயலாளர் சத்தியநாதன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன.


Updated On: 16 Aug 2021 10:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  2. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  3. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  4. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  5. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  6. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  7. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  8. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  9. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  10. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி